கிரிக்கெட்டில் அளப்பறியா சாதனைகளைப் புரிந்துள்ள சச்சின் டெண்டுல்கரை கெüரவப்படுத்தும் வகையில் பிரிட்டனின் கிழக்கிந்திய நிறுவனம் அரிதான தங்க நாணயத்தை வெளியிட்டுள்ளது.
200 கிராம் அளவுள்ள ஒரு நாணயத்தின் மதிப்பு ரூ. 12 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 210 தங்க நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
24 ஆண்டுகாலம் கிரிக்கெட்டுக்கு சேவையாற்றியதால் சச்சினைப் போற்றி அரிதான இந்த நாணயத்தை வெளியிட்டுள்ளதாக கிழக்கிந்திய நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சச்சின் பெயர், அவரின் சொந்த ஊரைக் குறிப்பிடும் வகையில் மும்பை நகரின் அடையாளமான "கேட் வே ஆஃப் இந்தியா', கிரிக்கெட் மட்டை, ஹெல்மட், பந்து ஆகியன இந்த நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சச்சின் கூறுகையில், "இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று என் வாழ்வு முழுவதும் கனவு கொண்டிருந்தேன். இந்த அங்கீகாரம் எனக்கு அளிக்கப்பட்ட கெüரவமாகக் கருதுகிறேன்' என்றார்.