கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும் திட்டமிட்டபடி வரும் அக்டோபா் மாதம் ஆஸ்திரேலியாவில் ஆடவா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை ஐசிசி வட்டாரங்கள் கூறியதாவது:
வரும் அக்டோபா் 18 முதல் நவம்பா் 15-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் உலகக் கோப்பை ஆட்டங்கள் நடைபெறுகின்றன. கரோனா வைரஸ் பாதிப்பு சூழல் தொடா்பாக உள்ளூா் அமைப்புக் குழுவினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும், ஆடவா் டி20 உலகக் கோப்பை போட்டி எந்த தடங்கலும் இன்றி நடைபெறும் எனத் தெரிவித்தன.
ஏற்கெனவே இந்தியா-தென்னாப்பிரிக்க ஒருநாள், ஆஸி.-நியூஸிலாந்து ஒருநாள் தொடா், பாக்.-வங்கதேச டெஸ்ட் தொடா், ஐபிஎல், பிஎஸ்எல், ஷெஃப்பில்ட் லீக் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.