2008 முதல் 2010 வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் கடைசியாக 2016-ல் ஐபிஎல்-லில் விளையாடினார்.
2017 ஐபிஎல் ஏலத்தில் காயம் காரணமாக அவருடைய பெயர் இடம்பெறவில்லை. 2018, 2019 ஐபிஎல் ஏலங்களில் எந்த அணியும் ஸ்டெயினைத் தேர்வு செய்யவில்லை.
இந்நிலையில் இந்த ஐபிஎல் போட்டியில் இதுவரை விளையாடிய ஆறு ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ள ஆர்சிபி அணி ஆஸ்திரேலியாவின் கோல்டர் நைலுக்குப் பதிலாக ஸ்டெயினைத் தற்போது தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார் கோல்டர் நைல். ஸ்டெயினின் வரவு ஆர்சிபி அணிக்குப் புதிய மறுமலர்ச்சியை உண்டாக்குமா என்பது இனிமேல் தான் தெரியவரும்.
ஆர்சிபி அணி, ஏப்ரல் 13 அன்று பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.