திருப்பதியில் இருந்து புதுச்சேரி வந்த ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது: திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு வந்தது. இந்த ரயிலின் 4-ஆவது முன்பதிவில்லா பெட்டியில் ரயில்வே ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.
அப்போது பெட்டியின் கழிவறையில் சுத்த செய்ய திறந்தபோது அதில் இறந்த நிலையில் ஆண் சடலம் இருந்தது கண்டு தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது அரசு மருத்துவனையில் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சோதனை முடிந்த பிறகே மரணத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.