காஞ்சிபுரம் ஓரிக்கையில் மின்சாரம் தாக்கி ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
காஞ்சிபுரம் ஓரிக்கை முல்லைநகரைச் சேர்ந்தவர் வீரகுமார். இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சூர்யா. இவர்களுக்கு ஜணேஷ் என்ற மூன்றரை வயது குழந்தையும், கோகேஷ் என்ற ஒன்றரை வயது குழந்தையும் இருந்தனர்.
இந்த நிலையில் கோகேஷ் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி பிடித்து விளையாடிக் கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கியது. உடனடியாக குழந்தையை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.