திருவாரூரில் தியாகராஜர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்த்தர்கள் திரண்டு கும்பாபிஷேகத்தில் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ, சமய மரபில் பெரிய கோவிலாகவும், பஞ்சபூததலங்களில் ஒன்றாக விளங்குகிறது. சிறப்புமிக்க இந்த கோவில் கும்பாபிஷேகத்துக்காக தமிழக அரசு ரூ.3 கோடியே 18 லட்சம் நிதியும், உபயதாரர்களின் நிதியளிப்புடன் கோவில் திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்தன. இன்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி பாதுகாப்பு பணியில் 1,600க்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் உயர் கோபுரங்கள், கண்காணிப்பு கேமராக்கள் கோவிலை சுற்றி பொறுத்தப்பட்டது.