குறிஞ்சிபாடி அருகே நடந்த கொள்ளை வழக்கில் 4 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை

குறிஞ்சிபாடி வட்டம் சித்தாலிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (85) ஓய்வு பெற்ற என்.எல்.சி நிறுவன ஊழியர். இவர் நிலம் வாங்குவதற்காக ரு.33 லட்சத்தைத் தனது வீட்டில் வைத்திருந்தார்.

நெய்வேலி: குறிஞ்சிபாடி வட்டம் சித்தாலிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (85) ஓய்வு பெற்ற என்.எல்.சி நிறுவன ஊழியர். இவர் நிலம் வாங்குவதற்காக ரு.33 லட்சத்தைத் தனது வீட்டில் வைத்திருந்தார்.

கடந்த 6.8.2010 அன்று இரவு வீட்டின் ஜன்னலை உடைத்து பிரோவில் வைத்திருந்த 33 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதிர்ச்சி அடைந்த வெங்கடாசலம் இதுதொடர்பாக குறிஞ்சிபாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு இவ்வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com