பேரளம் அருகே புதன்கிழமை பல்வேறு இடங்களில் சுவாமி சிலைகள் திருட்டில் ஈடுபட்ட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல் நிலையப் போலீஸாருக்கு சுவாமி சிலைகள் திருட்டில் ஈடுபடுபவர்கள் கொல்லுமாங்குடி பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீஸார் செவ்வாய்க்கிழமை கொல்லுமாங்குடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த காரைக்கால் மெய்யப்பன், சக்திவேல் ஆகிய இருவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுவாமி கல்சிலைகள் திருடியதும், இதற்கு காரைக்கால் அபூர்வசாமி மகன் ஆனந்தராஜ் (36), ராமலிங்கம் மகன் ரெமோ (35), கடலூர் தண்பாணி மகன் சாமிநாதன் (35), ராமலிங்கம் மகன் ராகுல் (23), சங்கரன்பந்தல் சித்ரவேலு முத்துக்குமாரசாமி (37) உதவியாக இருந்தது தெரியவந்துள்ளது. போலீஸார் அனைவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கைதானவர்கள் தங்களிடம் 50-க்கும் மேற்பட்ட கல் சிலைகள் இருப்பதாக காவல்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.