காஞ்சிபுரம் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதல்: கிளீனர் பலி

காஞ்சிபுரம் அருகே இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் லாரியின் கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் லாரியின் கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம், முல்பாகல் வட்டம், கப்பல்மடுகு பகுதியைச் சேர்ந்தவர் சங்கரப்பா(44). இவர் லாரி கிளீனராக வேலை செய்து வந்தார். இவர் தான் பணி செய்யும் லாரியில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். லாரியை இதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி(24) ஓட்டிச் சென்றார்.

இந்த லாரி தாமல் ஏரி அருகே செல்லும்போது முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் சங்கரப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக பாலுசெட்டிசத்திரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com