புதுச்சேரி: புதுவையில் உள்ள பல்வேறு மழைநீர் கால்வாய்களை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார்.
புதுவையின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகிறார்.
இந்த நிலையில் 100 அடி சாலை அருகில் உள்ள ராகவேந்திரா நகர் பகுதிக்கு சென்று சனிக்கிழமை காலை ஆய்வு செய்தார். ஆளுநர் மாளிகையில் இருந்து மிதிவண்டியில் சென்ற அவர், ராகவேந்திரா நகர் பகுதியில் உள்ள மழை நீர் கால்வாய்களை ஆய்வு செய்தார்.
அப்போது அவருடன் காவல்துறை ஆய்வாளர்கள், நகராட்சி அதிகாரிகள் உடன் சென்றனர்.