சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது உடல் நலப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் கவிஞர் வைரமுத்து.
பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை என்பது பல போராட்டங்கள் நிறைந்தது. தற்போது அவர் உடல் நலப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
மருத்துவ பலம், மனோ பலம் இரண்டினாலும் அவர் மீண்டு வருவார். அவர் முழு நலம் பெற வேண்டும் என்று நாங்கள் பெரிதும் விரும்புகிறோம் வாழ்த்துகிறோம் என்று தெரிவித்தார்.