ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் மரணத்தில் சந்தேகம்: உறவினர்கள்

ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் மரணத்தில் சந்தேகம்: உறவினர்கள்

ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


ஆத்தூர்: ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கனகராஜ் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் காலதாமதம் செய்வதாகவும் அவர்கள் புகார் கூறியுள்ளனர்.

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கனகராஜ் தேடப்பட்டு வந்த நிலையில் ஆத்தூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.

ஆனால், காவலாளி கொலை சம்பவத்துக்கும், கனகராஜுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவரது சகோதரர் கூறியுள்ளார்.

கொடநாட்டில் ஓய்வு எடுக்கச் செல்லும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ், சில ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையல், எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் அவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் உப்பு ஓடை பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் கனகராஜ் மரணம் அடைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com