திண்டுக்கல்: திண்டுக்கல் நிலக்கோட்டையை அடுத்த கொக்குபட்டியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பள்ளி மாணவி மீது மர்ம நபர் ஆசிட் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கொக்குபட்டியை சேர்ந்தவர் காயத்ரி. அவர் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 5 ஆம் தேதி இரவு அவரின் வீட்டில் மின்தடை ஏற்பட்டது.
இதையடுத்து காயத்ரி தனது குடும்பத்தாருடன் சென்று உறவினர் ஒருவரின் வீட்டில் தூங்கினார். அதிகாலை காயத்ரி வலி தாங்க முடியாமல் அலறல் சப்தம் கேட்டு அனைவரும் பதற்றத்துடன் கண் விழித்து ஒடி வந்தனர்.
அப்பொழுது காயத்ரியின் தலை முடி கருகியிருந்தது. உடனே அவரை நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீசியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.