திருச்சி விமான நிலையத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 680 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தின் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில், சென்னை மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 3 பேர் செல்போன் சார்ஜரில் 160 கிராம் நகையை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.
இதேபோல், சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தின் பயணிகளிடம் நடத்திய பரிசோதனையில் புதுக்கோட்டை, திருவாரூர், திருப்பத்தூர் மற்றும் திருச்சியை சேர்ந்த 4 பேர் 520 கிராம் தங்கத்தை மறைத்துவைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.