ரூ.22 ஆயிரத்தைக் கடந்தது தங்கம் பவுனுக்கு ரூ.232 அதிகரிப்பு

ஆபரணத் தங்கம் ஒரு பவுன் சென்னையில் வியாழக்கிழமை (ஆக.10) ரூ.22 ஆயிரத்தைக் கடந்தது. பவுனுக்கு ரூ.232 அதிகரித்து, ரூ.22,048-க்கு விற்பனையானது.

ஆபரணத் தங்கம் ஒரு பவுன் சென்னையில் வியாழக்கிழமை (ஆக.10) ரூ.22 ஆயிரத்தைக் கடந்தது. பவுனுக்கு ரூ.232 அதிகரித்து, ரூ.22,048-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி, ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.29 அதிகரித்து, ரூ.2,756-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 80 பைசா உயர்ந்து ரூ.41.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.41,900 ஆகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com