காவிரி டெல்டா முழுவதும் காப்பாற்றப்பட வேண்டும் என கதிராமங்கலம் மக்கள் மத்திய, மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தை விட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும்; இதுதொடர்பான போராட்டத்தில் காவல் துறையால் கைது செய்யப்பட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி அய்யனார் கோயிலில் 41 ஆவது நாளாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.