மேட்டூர் அணையின் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் அணையின் 16 கண் உபரி நீர் போக்கியில் தேங்கியிருந்த தண்ணீரில் முழ்கி மோகன்ராஜ், மணிகண்டன், சகோதரர்கள் ராஜா, தமிழ் அழகன் ஆகியோர் உயிரிழந்தனர். தற்போது 3 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு சடலத்தையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
உயிரிழந்த சிறுவர்களில் ராஜா 6வது, தமிழ் அழகன் 4வது, மோகன்ராஜ் 2வது படித்து வந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.