பேரறிஞர் அண்ணாவின் 48ஆவது நினைவு தினத்தையொட்டி திமுகவினர் பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 48ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர் அமைதிப் பேரணி மேற்கொண்டனர். இந்தப் பேரணி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முடிவடைந்தது. பேரணியில், துரைமுருகன், ஆ. ராசா, தயாநிதி மாறன், பி.கே. சேகர்பாபு, ஜெ. அன்பழகன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அதைத்தொடர்ந்து அண்ணா நினைவிடத்தில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.