ஆற்காடு அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம், ஆற்காட்டை அடுத்த புதுமாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் எத்திராஜ்(66). விவசாயியான இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு அதே ஊரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனுடன் இரு சக்கர வாகனத்தில் வாலாஜாபேட்டை அருகே உள்ள தென்கடப்பந்தாங்கல் பகுதியில் நடைபெற்ற உறவினரின் திருமணத்துக்குச் சென்றனர்.
ஆற்காடு புறவழிச் சாலையைக் கடந்தபோது, சென்னையில் இருந்து எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட எத்திராஜ் திங்கள்கிழமை உயிரிழந்தார்.