தமிழகத்தின் அடுத்த முதல்வர் வி.கே.சசிகலாதான் என்று அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்களவை துணைத் தலைவருமான தம்பிதுரை கூறினார்.
முதல்வர் ஓ.பி.எஸ். பன்னீர்செல்வத்தின் பேட்டி குறித்து செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது
அதிமுக நிலையான ஆட்சியை தரும். பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் அனைத்து நிலைகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். 134 எம்.எல்.ஏ.க்களும், அனைத்து எம்.பி.க்களும் சசிகலாவுக்கு ஆதரவு தருகிறோம். அடுத்த முதல்வர் சசிகலாதான்.
முதல்வர் பன்னீர்செல்வத்தின் பேட்டியின் பின்னணியில் திமுகவின் சதித்திட்டம் உள்ளது என்றார் அவர்.