புதுதில்லி: அதிமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆளுநர் ஜனநாயக கடமையை நிறைவேற்ற தவறுகிறார் என அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து இரு அவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகக் கடமையை ஆளுநர் நிறைவேற்றத் தவறியதாகக் கூறி அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்ற இரு அவைகளும் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன.
பின்னர் அவை கூடியதும் தமிழக அரசியல் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி அதிமுக எம்பி வேணுகோபால் மக்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். தமிழக அரசியல் விவகாரம் குறித்து விவாதிக்க அதிமுக எம்பி கேகே வேணுகோபால் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
மக்கள் நலனுக்கு போராட தவறிய உறுப்பினர்கள் தங்கள் சார்ந்துள்ள கட்சிக்காக அவையை முடக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.