கோவை: தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி நாளை வரே நீடிப்பதே கேள்விக் குறிதான் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்றுவந்த திராவிடக் கட்சிகளின் சகாப்தம் முடிவடைந்து.
அதிமுக ஆட்சியில் காவல்துறையில் சுதந்திரமாக செயல்படவில்லை. முதல்வராக பதவியேற்றுள்ள எடப்படி பழனிசாமியை சுதந்திரமாக செயல்பட விடமாட்டார்கள். மேலும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி நாளை வரே நீடிப்பதே கேள்விக் குறிதான் என்று கூறினார்.
மேலும், தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான அனைத்து பணிகளையும் பாஜக மேற்கொள்ளும். தமிழகத்தில் குடும்ப ஆட்சியை மீண்டும் கொண்டு வரவேண்டாம் என்று தெரிவித்தார்.