தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் அவையில் இருந்து மு.க. ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆங்காங்கே மறியல் போராட்டமும் நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர், சேலம், திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றன.