சென்னை: சென்னை ஆதம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் உள்ள சாலையில் சுமார் 2 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
ஆதம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் உள்ள சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட இடத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.