டாஸ்மாக் கடையை மூடக்கோரி தலைமைச் செயலகம் நோக்கி பாஜக சார்பில் பேரணி

தமிழகத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி தமிழிசை சவுந்திரராஜன் தலைமையில் பாஜகவினர் பேரணியாக சென்றனர். 
டாஸ்மாக் கடையை மூடக்கோரி தலைமைச் செயலகம் நோக்கி பாஜக சார்பில் பேரணி
Updated on
1 min read

தமிழகத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி தமிழிசை சவுந்திரராஜன் தலைமையில் பாஜகவினர் பேரணியாக சென்றனர். 

தமிழகத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பாஜக சார்பில் சென்னையில் இன்று தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி நடைபெற்றது. முன்னதாக சேப்பாக்கத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணிக்கு மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமை தாங்கினார். 

மேலும் இதில் தேசிய செயலாளர் முரளிதரராவ் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்துகொண்டனர். பேரணியாக சென்ற அவர்கள் அனைவரும் சிறிது தூரத்திலேயே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

அப்போது பேசிய முரளிதராவ், தமிழ்நாடு தற்போது டாஸ்மாக் நாடாக மாறியுள்ளது. தமிழகத்திற்கு டாஸ்மாக் தேவை இல்லை, பசும்பால்தான் தேவை என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com