தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திங்கள்கிழமை 7 இடங்களில் 100 டிகிரிக்கு அதிகமாக வெப்பநிலை பதிவானது. திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது.
சென்னையைப் பொருத்தவரை, நுங்கம்பாக்கத்தில் 99 டிகிரி, மீனம்பாக்கத்தில் 98 டிகிரி வெப்பநிலை பதிவானது.
கோடைகாலம் நிறைவடைந்த பிறகு, தென்மேற்குப் பருவமழை மே கடைசியில் தொடங்கியது. தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தாலும், பல இடங்களில் வெயில் கொளுத்துகிறது.
மழை: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் 20 மி.மீ, சோழவரத்தில் 10 மி.மீ மழை பெய்தது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்)
திருச்சி 105
கரூர் பரமத்தி,
பாளையங்கோட்டை 103
மதுரை, கடலூர் 101
புதுச்சேரி, தூத்துக்குடி 100