பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய கழகத்தின் கதை என்ற நூல் வரும் ஜூலை 3-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
அதிமுகவின் தொடக்கம் முதல் இன்று வரையிலான அரசியல் முக்கிய நிகழ்வுகளைக் கழகத்தின் கதை என்ற தலைப்பில் நூலாக ராமதாஸ் எழுத்தியுள்ளார். தமிழக அரசியலின் 45 ஆண்டு கால நிகழ்வுகளை அறியும் வகையில் அவர் எழுதியுள்ளார்.
இந்த நூல் வெளியீட்டு விழா ஜூலை 3-ஆம் தேதி காலை 10 மணிக்கு பெரம்பலூர் பூமணம் திருமண அரங்கத்தில் நடைபெற உள்ளது. ராமதாஸ் முன்னிலையில் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு நூலை வெளியிடவுள்ளார். பாமக மாநில, மாவட்ட நிர்வாகிகள் விழாவில் பங்கேற்க உள்ளனர்.