தமிழ்நாடு
தருமபுரியில் எரிசாராயம் குடித்து 4 பேர் உயிரிழப்பு
தருமபுரியில் எரிசாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
தருமபுரியில் எரிசாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஏரியூரில் நேற்றிரவு பச்சையப்பன், விஜய், பழனிசாமி உள்ளிட்டோர் எரிசாராயம் குடித்துள்ளனர். இச்சம்பவத்தில் பச்சையப்பன், விஜய், பழனிசாமி ஆகிய 3 பேர் பலியானார்கள். மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட உத்தரகுமார் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து தருமபுரியில் எரிசாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.