சென்னை: தனது பதவி நீட்டிப்பு குறித்து கருத்து தெரிவித்த தலைமைச் செயலக நிர்வாகியிடம் நடந்த கொண்ட விதத்திற்கு, சட்டப் பேரவை செயலர் ஜமாலுதீன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் செயலர் ஜமாலுதீன். இவரது பதவிக் காலம் விரைவில் முடிய உள்ள நிலையில் இவருக்கு அரசு பணி நீட்டிப்பு வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இவருக்கு பணி நீட்டிப்பு வழங்குவது குறித்து தலைமை செயலக நிர்வாகி ஒருவர் சில கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது
இது பற்றிய தகவல் அறிந்ததும் குறிப்பிட்ட நிர்வாகியிடம் ஜமலாலுதீன் கடுமையாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த தலைமைச் செயலக நிர்வாகிகள் சங்கத்தினர் முதலமைச்சர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தனது பதவி நீட்டிப்பு குறித்து கருத்து தெரிவித்த தலைமைச் செயலக நிர்வாகியிடம் நடந்த கொண்ட விதத்திற்கு, சட்டப் பேரவை செயலர் ஜமாலுதீன் வருத்தம் தெரிவித்துள்ளார். எனவே தற்பொழுது பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்துள்ளது.