தமிழ்நாடு
காலமானார் ஏ.ஞானம்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தராகப் பதவி வகித்த ஏ.ஞானம் (86) புதன்கிழமை இரவு உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தராகப் பதவி வகித்த ஏ.ஞானம் (86) புதன்கிழமை இரவு உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
அவரது உடல் வியாழக்கிழமை மாலை புதுவை கோட்டக்குப்பத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. கோட்டக்குப்பத்தில் வெள்ளிக்கிழமை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. சமுதாயக் கல்லூரி முறையை முதல்முதலாக அறிமுகம் செய்த அவர் 1991-1997-இல் புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தராகப் பதவி வகித்தார். அதற்கு முன்பு பாரதிதாசன், சென்னை பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராகப் பணியாற்றினார்.