சென்னை: சென்னை வண்டலூரில் தடுப்புச்சுவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் சென்னை அடையாறைச் சேர்ந்த சந்தோஷ்(28), ராஜா(27) என தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.