மேட்டுப்பாளையம்: கட்சியில் இருந்து வழிமாறி சென்றவர்கள் மீண்டும் நல்வழிக்குத் திரும்ப வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கோவையில் இன்று கூறினார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் பழனிசாமி, வழிமாறி சென்றவர்கள் மீண்டும் நல்வழிக்குத் திரும்ப வேண்டும்.
மறைந்த ஜெயலலிதாவின் நல்லாட்சியின் போது அளிக்கப்பட்ட நலத்திட்டங்கள் அனைத்தும் தொடர, பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அணியில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
மேலும், தமிழகத்தில் நடக்கும் அதிமுக ஆட்சி கலைந்து விடும் என்று சிலர் பகல் கனவு கண்டனர். அந்த பகல் கனவு பலிக்காது. வாரிசு இல்லாத ஜெயலலிதாவுக்கு, அதிமுக தொண்டர்கள்தான் வாரிசுகள் என்று பேசினார்.