சென்னை: எதிர்க்கட்சிகளைச் சந்திக்க மறுக்கும் பிரதமர் அதிமுக அணிகளை மட்டும் சந்திப்பது ஏன் என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,
ஆளுங்கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி தமிழக அரசை மத்திய அரசு இயக்குகிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு அக்கறையில்லை. அதிமுக.,வை மிரட்டி, அதன் மூலம் பா.ஜ.க தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறது.
பால் கலப்படம் குறித்த அமைச்சர் தெரிவித்திருக்கும் தகவல் பெரும் பீதியை ஏற்படுத்துகிறது. பால் கலப்படம் குறித்து உடனடியாக குழு அமைத்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.