சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் டிசம்பர் 21ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். திமுக நிறுத்தும் வேட்பாளருக்கு காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.