இரட்டை இலைச் சின்னம் எந்த அணிக்கு கிடைத்தாலும் உபயோகம் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது, அமைச்சர்கள் தங்கள் பிரச்னைகளை ஒதுக்கிவிட்டு மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்கு முன்வர வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிமுக அணிகளுக்கு இடையே பிளவு ஏற்பட்டதால் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமாக இருந்த இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.