எம்.ஜி.ஆர் குறித்த அரிய புகைப்படங்களை அளிக்கலாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை, சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த அரசின் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் நூற்றாண்டு விழா மலர் வெளியிடப்படுகிறது. இதற்காக, எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களை வைத்திருப்போர், தலைமைச் செயலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்புத் துறை, புகைப்படப் பிரிவு, தலைமைச் செயலகம், சென்னை -9 என்ற முகவரியிலோ, மின்னஞ்சல் மூலமாகவோ (jdfieldpublicity@gmail.com) அவற்றை அனுப்பி வைக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு 94441 27340 என்ற செல்லிடப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.