ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே செப். 7 ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், செங்கோட்டையன் ஆகியோர் இன்று சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.