மதுரை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த தலைமை ஆசிரியருக்கு 55 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் 2011ம் ஆண்டு, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி, பள்ளியில் படித்த 90க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இது குறித்து மாணவிகளின் பெற்றோர் மற்றும் மாதர் சங்கம் சார்பில் கொடுத்த வழக்கை விசாரித்த தீண்டாமை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம், ஆரோக்கியசாமிக்கு 55 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட 43 மாணவிகளுக்கு ரூ.3.40 லட்சம் இழப்பீடு வழங்கவும் ஆரோக்கியாசமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.