சட்டப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு பட்டம் பெறத் தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பல்கலைக்கழகம் வரவேற்றுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 9-ஆவது பட்டமளிப்பு விழா செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு 2018 மே மாதம் வரை படிப்புகளை முடித்து பட்டம் பெறத் தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பத்தை www.tndalu.ac.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரிடம் பெற்றோ பூர்த்தி செய்து ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பட்டமளிப்பு விழா நடைபெறும் நாள், இடம் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.