கோவை: குடும்பச் சண்டையில் மகள்களைக் கொன்றுவிட்டு தலைமறைவான தந்தையை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
கோவை மாவட்டம் பீளமேடு மசகாளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (45). இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு 2 மகள்கள்.
நேற்று கணவன் - மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் செல்வராணி வெள்ளலூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று காலை வீட்டுக்கு வந்த போது, இரண்டு குழந்தைகளும் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பத்மநாபன் தனது இரண்டு மகள்களையும் கழுத்தை நெறித்துக் கொன்று விட்டு தலைமறைவாகியிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.