கர்நாடகா அரசுக்கு, தமிழக அரசு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: அமைச்சர் பாண்டியராஜன்

நீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் எந்தவொரு உத்தரவையும் பின்பற்றாமல் உள்ளதால் கர்நாடகா அரசுக்கு, தமிழக அரசு பதில்
கர்நாடகா அரசுக்கு, தமிழக அரசு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: அமைச்சர் பாண்டியராஜன்


நீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் எந்தவொரு உத்தரவையும் பின்பற்றாமல் உள்ளதால் கர்நாடகா அரசுக்கு, தமிழக அரசு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

அகில இந்திய நாடார் பேரவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியின் குறுக்கே எந்தவொரு அணை கட்ட வேண்டும் என்றாலும் மூன்று மாநிலங்களில் இருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்றும், நீதிமன்ற தீர்ப்புகளை பின்பற்றாமல் கர்நாடக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார். 
மேலும், கர்நாடக அரசுக்கு, தமிழக அரசு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் அணை விவகாரத்தை சட்ட ரீதியாக சந்திப்போம் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com