அரசு மருத்துவமனையில் சடலத்தை எலி கடித்ததால் உறவினர்கள் அதிர்ச்சி

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அரசு மருத்துவமனை சவக் கிடங்கில் மாணவரின் சடலத்தை எலி கடித்து குதறியது.


கடலூர் மாவட்டம், சிதம்பரம் அரசு மருத்துவமனை சவக் கிடங்கில் மாணவரின் சடலத்தை எலி கடித்து குதறியது.
சிதம்பரம் பரமேஸ்வரநல்லூர் சொக்கலிங்கம் நகரைச் சேர்ந்த நடராஜன் மகன் வைத்தீஸ்வரன் (22). தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., கணினி பட்டப் படிப்பு முடித்துள்ளார். இவர் திங்கள்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வைத்தீஸ்வரனின் கல்லூரி தோழி ஒருவர் கடந்த 9-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்று திரும்பிய வைத்தீஸ்வரன் மனமுடைந்த நிலையில் இருந்தாராம். இந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
வைத்தீஸ்வரனின் சடலம் சிதம்பரம் அரசு மருத்துவமனை சவக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. உடல்கூராய்வுக்காக செவ்வாய்க்கிழமை காலை பிணவறையைத் திறந்துபோது வைத்தீஸ்வரனின் சடலத்தின் மூக்குப் பகுதியை எலி கடித்துக் குதறியது தெரிய வந்தது.
பின்னர், மருத்துவர்கள் வைத்தீஸ்வரனின் உறவினர்கள், நண்பர்களை சமரசப்படுத்தி, உடல்கூராய்வு செய்து சடலத்தை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com