மேக்கேதாட்டு பிரச்னையில் பேச்சுவார்த்தை ஏமாற்று வேலை:  திமுக பொருளாளர் துரைமுருகன்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்பது ஏமாற்று வேலை என்றார் திமுக பொருளாளர் துரைமுருகன்.
மேக்கேதாட்டு பிரச்னையில் பேச்சுவார்த்தை ஏமாற்று வேலை:  திமுக பொருளாளர் துரைமுருகன்


மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்பது ஏமாற்று வேலை என்றார் திமுக பொருளாளர் துரைமுருகன்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:
மேக்கேதாட்டு அணை விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை என்பது ஏமாற்று வேலை. எந்தக் காரணத்தைக் கொண்டும் பேச்சுவார்த்தை தேவை இல்லை. சட்டப்படி என்ன கூறப்பட்டுள்ளதோ அதுவே நடக்க வேண்டும் என்றார் அவர்.
அமைச்சர் மீது நடவடிக்கை தேவை: நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை பொது கணக்குக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த துரைமுருகன் அளித்த பேட்டி:
குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உள்ளான அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரைப் பதவியில் விட்டுவைத்திருப்பது நியாயமல்ல.
ஒருவழியாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கேரளத்தில் வெள்ளச் சேதம் ஏற்பட்டபோது வந்து பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் புயல் பாதிப்பு ஏற்பட்டபோது நேரில் வரவில்லை. தமிழகம் மீதான மத்திய அரசின் அலட்சியத்தின் வெளிப்பாடே இது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com