சென்னையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கென தனி இணையதளம் தொடங்கப்பட்டு அதில் பங்கேற்பாளர்கள் பதிவிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடைபெற இன்னும் 30 நாள்களுக்கும் குறைவாகவே உள்ள நிலையில், அரசின் சார்பில் ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இரண்டு நாள்கள் மிகப் பிரமாண்டமான முறையில் மாநாடு நடந்தது. இம்மாநாட்டின் வழியாக, ரூ.2.40 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் பங்கேற்ற மாநாட்டில் 100-க்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இம்மாநாட்டில் பேசிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்புக்கிணங்க வரும் ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது.
பல்வேறு தலைப்புகளில் விவாதம்: இரண்டு நாள்களிலும் தொழில் துறை தொடர்பாக பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறவுள்ளன. தொடக்க விழாவைத் தொடர்ந்து, முதல்வர், அமைச்சர்களுடன் தொழில் அதிபர்கள் சந்தித்துப் பேச்சு, கருத்தரங்குகள், பன்னாட்டு நிறுவனங்களின் முதன்மைச் செயல் அதிகாரிகளின் ஆலோசனைகள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் துறையினரின் உரைகள் என பல்வேறு முக்கிய அம்சங்களுடன் இரண்டு நாள்கள் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 24-ஆம் தேதி மாலை நிறைவு விழா நடைபெறுகிறது.
இணையதளத்திலேயே முன்பதிவு: உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான விவரங்களை அவ்வப்போது அறிந்து கொள்ள தனி இணையதளம் (www.tngim.com) தொடங்கப்பட்டுள்ளது. அதில், விவரங்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன. மாநாட்டில் அயல்நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக, இணையதளத்திலேயே முன்பதிவு செய்யும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாநாட்டின் நோக்கம், தமிழகத்தில் எந்தெந்த துறைகளில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பன போன்ற பல்வேறு விவரங்கள் இணையதளத்தில் தரப்பட்டுள்ளன.
கூடுதல் தகவல்கள் சேர்க்கப்பட்டு இணையதளம் முழு அளவிலான பயன்பாட்டுக்கு விரைவில் வரும் என அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

13/32: நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 13 அணிகள்!

அசாமில் இருந்து துபை, அபுதாபிக்கு நேரடி விமானம்! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

தவெக அரசுக்கு உதவவில்லை! உண்மை என்ன? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்

தங்கம் விலை அதிகரிப்பால் இரு மடங்கு உயர்வு... பிஃபா உலகக் கோப்பையின் விலை இவ்வளவா?
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


