பாலேஸ்வரம் ஆதரவற்றோர் இல்லத்தில் மத்திய உளவுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அருகே பாலேஸ்வரத்தில் தனியாருக்குச் சொந்தமான இறக்கும் தருவாயில் உள்ள ஆதரவற்றோருக்கான கருணை இல்லம் உள்ளது.
இந்த இல்லத்துக்கு தாம்பரத்திலிருந்து காய்கறி வேனில், முதியோர் இருவர் சித்திரவதை செய்யப்பட்டு, இறந்த பிரேதத்துடன் சேர்த்து அனுப்பி வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் பாலேஸ்வரம் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி தாமஸிடம் மத்திய உளவுத் துறை அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.