அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது. 

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது. 

மதுரை மாவட்டத்தில் ஜன.14 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15 ஆம் தேதி பாலமேடு, 16 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு விழா நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்றும எனவே, மதுரை மாவட்டத்தில் வரும் 14ஆம் தேதி நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் செல்வம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். 

ஆனால் இம்மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com