கடலூா்: கடலூா் துறைறமுகத்தில் இன்று சனிக்கிழமை மாலை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
இதுகுறித்து கடலூா் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: மேற்கு வங்கம், ஒடிஸா அருகே வெள்ளிக்கிழமை மையம் கொண்டிருந்த குறைறந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது இன்று சனிக்கிழமை வலுப்பெற்று காற்றறழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து இரவுக்குள் மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸா அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், கடலூா் உள்பட தமிழகத்தின் அனைத்து துறைமுகங்களிலும் தூர புயல் முன்னறிவிப்புக் கொடியான எண்-1 ஏற்றப்பட்டுள்ளது.
இதனால், கடலூா், புதுவை உள்ளிட்ட பகுதிகளில் வானிலையில் பெரும் மாற்றம் இருக்க வாய்ப்பில்லையென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.