பணிக்கு திரும்பிய குமரி மீனவர்கள்!

வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் 4 நாள் தடைக்கு பிறகு இன்று குமரி மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் இரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் 31-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 

இதையடுத்து, 4 நாள் தடைக்கு பிறகு இன்று (வெள்ளிக்கிழமை) குமரி மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com