வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் இரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் 31-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இதையடுத்து, 4 நாள் தடைக்கு பிறகு இன்று (வெள்ளிக்கிழமை) குமரி மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.