காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் எவ்வித இடைக்கால ஏற்பாட்டுக்கும் தமிழக அரசு இணங்கக் கூடாது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் காவிரி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் தமிழக அரசின் குழு, பிப்ரவரி 22 -இல் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டவாறு, காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களுக்குள் அமைப்பதை வலியுறுத்தும் வகையிலான அணுகுமுறையை மட்டும் மேற்கொள்ள வேண்டும். வேறு இடைக்கால ஏற்பாடு எதிலும், அனைத்து கட்சிகள் - விவசாய சங்கங்களின் ஒப்புதலின்றி, சமாதானம் செய்து கொள்ள முயற்சிக்கக் கூடாது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.