தமிழக மக்கள் மீது திணிக்கப்பட்ட சொல்தான் திராவிடம் என, பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள குழந்தைவேலப்பர் கோயிலில் வியாழக்கிழமை பாஜக பிரமுகரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''எல்லா விதத்திலும் தமிழ் என்ற பெயரே இருக்கக்கூடாது, என்பதற்காக தமிழக மக்கள் மீது திணிக்கப்பட்ட சொல்தான் திராவிடம். இதனை மலையாளம், தெலுங்கு, கன்னட மொழியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இங்கு மட்டும் ஏன் பேசுகிறார்கள்? அதோடு மட்டுமின்றி தமிழ் என்ற சனியனே இருக்கக் கூடாது என்று பெரியார் பேசியதற்கு ஆதாரங்கள் உள்ளன.
இந்த உண்மையை எடுத்துக் சொல்வதினால் மக்களிடம் தாக்கம் ஏற்படுகிறது என்பதால் என்னை வசைபாடுகின்றனர்'' என்று தெரிவித்தார்.